சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) திட்ட ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை, எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இன்றைய தினம் (16) சட்டத்தரணிகள் நாடளாவிய ரீதியில் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணிக்கத் தீர்மானித்திருந்த நிலையிலேயே, இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்று வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது, பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின் பின்னணி: இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ‘கிரிஷ்’ நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை மோசடியாகப் பெற்றுக் கொண்டதன் ஊடாக, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் (Prevention of Money Laundering Act) நாமல் ராஜபக்ஷ குற்றம் இழைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
