இலங்கையின் பிராந்திய கடற்பரப்பிற்கு சற்று வெளியே மூழ்கிக்கொண்டிருந்த மற்றும் உதவி கோரி அழைப்பு விடுத்த ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 30 மாலுமிகளை இலங்கை மீட்டுள்ளது.
180 ஊழியர்களைக் கொண்ட கப்பலில் இருந்து காயமடைந்த மாலுமிகள் நாட்டின் தெற்கில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார் என AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு மத்தியில் அந்தப் போர்க்கப்பல் தாக்கப்பட்டதா என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அரசாங்கத்திடம் இருந்து உடனடியாக பதில் வரவில்லை என்று அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
