கொழும்பு, நவம்பர் 10 : அநுராதபுரம், தலாவ ஜயகங்க சந்திக்கு அருகில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்ததில், உயர்தரப் பரீட்சைக்குச் சென்று கொண்டிருந்த மாணவன் ஒருவன் உட்படப் பலர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்கள் தலாவ மற்றும் தம்புள்ளகம உள்ளிட்ட அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
