அஸ்வின் ஏன் ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெற்றார்?”: முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கேள்வி

சென்னை: ஐபிஎல் தொடரிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வு பெற்றது தனக்கு ஆச்சரியமளிப்பதாக, இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிரிஷ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அஸ்வினிடம் பணம், புகழ் என எல்லாம் இருக்கும்போது, இந்த முடிவை அவர் எடுத்ததற்கான காரணம் புரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், “நான் அஸ்வினின் இடத்தில் இருந்திருந்தால், இன்னும் இரண்டு ஆண்டுகள் ஐபிஎல்-இல் விளையாடியிருப்பேன். ஐபிஎல்-இல் கிடைக்கும் அங்கீகாரமும், வெளிச்சமும் வேறு எந்த லீக்கிலும் கிடைக்காது,” என்றார். வெளிநாட்டு லீக்குகளுக்குச் செல்வதற்காக, ஐபிஎல்-லிருந்து ஓய்வுபெறும் ஒரு புதிய போக்கை அஸ்வின் தொடங்கி வைக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“அஸ்வினின் வளர்ச்சிக்கு ஐபிஎல் மிக முக்கியக் காரணம். சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாடியபோதுதான், அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக உருவானார்,” எனவும் ஸ்ரீகாந்த் நினைவு கூர்ந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *