ஆடிவேல் தேரில் கலந்து வழிபாடு செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய

கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி கோயிலின் ஆடிவேல் திருவிழாவின் தேர்ப் பவனியில், இன்று (07) பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

அவர் அர்ச்சனைத் தட்டு வழங்கி வழிபாடுகளில் ஈடுபட்டார். பின்னர் அலரி மாளிகைக்கு முன்பாக நடைபெற்ற விசேட பூஜையில் பங்கேற்று, அரசாங்கத்துக்காக ஆசீர்வாதம் பெற்றார்.

நிகழ்வில் பிரதமர் செயலாளர் மற்றும் அலுவலக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *