கொழும்பு: சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (23) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்தின் செயற்பாடுகள் “பழிவாங்கும் நடவடிக்கைகள் அன்றி வேறில்லை” எனக் கடுமையாகச் சாடினார்.
“சிறு குற்றங்களுக்காக அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுவது குறித்து நான் வருந்துகிறேன்,” எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை மக்கள் சரியாகப் புரிந்துகொண்டுள்ளதாகவும், மக்கள் தொடர்ந்தும் அரசியல் தலைவர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறினார். “நாங்கள் மக்களை நேசிக்கிறோம். அதனால்தான் மக்கள் எங்களை நேசிக்கிறார்கள்,” எனவும் அவர் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் நிலை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், “அரசியலில் ஈடுபட்டால், இவையெல்லாம் பாரம்பரியத்தின் ஒரு அங்கம். அவர் அதனை எதிர்கொள்வார்,” என்றார்.