Headlines

ஈஸ்டர் தாக்குதல் ஆதாரங்கள் அழிக்கப்பட்டன! – உண்மையை வெளிக்கொணர்வதில் அரசு உறுதி! – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில்!

கொழும்பு, நவம்பர் 19 : ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் கொடூரமான தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதில் அரசாங்கம் பின்வாங்காது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, முக்கிய அறிக்கைகளில் இருந்து பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அரசாங்கம் ஏற்கனவே புதிய ஆதாரங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். “ஆதாரங்கள் அழிக்கப்பட்ட போதிலும் உண்மையை வெளிக்கொணர்வோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைப் (CID) பாதுகாத்துப் பேசிய ஜனாதிபதி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதற்காக CID தலைவர் ஷானி அபேசேகரவும், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவும் அல்லும் பகலும் உழைத்து வருவதாகக் கூறினார். “அவர்கள் விரைவில் உண்மையை வெளிப்படுத்துவார்கள்” என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *