ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (ஆகஸ்ட் 10) நடைபெறுகிறது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,787 பரீட்சை நிலையங்களில் இந்தத் தேர்வு இடம்பெறுகிறது.

பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பின்படி,

  • வினாத்தாள் II: காலை 9:30 மணி முதல் 10:45 மணி வரை நடைபெறும்.
  • வினாத்தாள் I: காலை 11:15 மணி முதல் நண்பகல் 12:15 மணி வரை நடைபெறும்.

பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள்

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, அனைத்து பரீட்சார்த்திகளும் காலை 8:30 மணிக்கு தமது பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும். காலை 9:00 மணிக்குள் பரீட்சை மண்டபத்தில் ஆசனங்களில் அமர்ந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சை நேரத்தில் ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், பரீட்சார்த்திகளோ அல்லது பெற்றோரோ 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம். இதற்காக விசேட செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *