கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 11) 10 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.

நிட்டம்புவ முதல் மினுவங்கொட வரையான பிரதான நீர்க் குழாயில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.


பாதிக்கப்படும் பிரதேசங்கள்

  • ரன்பொகுணகம
  • படலிய
  • அத்தனகல்ல
  • பஸ்யால
  • நிட்டம்புவ
  • கந்தஹேன
  • மாபாகொல்ல
  • கொங்கஸ்தெனிய
  • பின்னகொல்லவத்த
  • கொலவத்த
  • கோரகதெனிய
  • ரன்பொகுணகம வீட்டுத் திட்டம்
  • உரபொல
  • திக்கந்த
  • மீவிட்டிகம்மன
  • மைம்புல
  • மதலான
  • ஹக்கல்ல
  • அலவல
  • கலல்பொல
  • எல்லமுல்ல

எனவே, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தமக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *