கொழும்பு, டிசம்பர் 02: தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதுவரும் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் (Sergio Gor), ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைத் தொடர்பு கொண்டு பேசினார்.
‘டிட்வா’ புயலைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நிலைமையை அமெரிக்கா தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர் குறிப்பிட்டார்.
நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து, பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அமெரிக்கா வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு ஜனாதிபதி திஸாநாயக்க நன்றி தெரிவித்தார்.
‘டிட்வா’ புயலின் கடுமையான தாக்கத்தைத் தொடர்ந்து, இலங்கையில் அவசர நிவாரணப் பணிகளுக்காக அமெரிக்கா ஏற்கனவே 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை (US$ 2 million) வழங்க உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
