Headlines

நாட்டின் பல பாகங்களில் இன்று இடியுடன் கூடிய மழை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

கொழும்பு, நவம்பர் 21: வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (நவம்பர் 21) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தீவின் மற்ற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகாலை வேளையில் சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் பனி மூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அன்புடன் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *