யாழ்ப்பாணம்: வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 20ஆம் நாள் திருவிழா இன்று (18) பக்திபூர்வமாக இடம்பெறுகின்றது.
கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த மகோற்சவத்தில், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டு வருகின்றனர்.
மொத்தம் 25 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் முக்கிய திருவிழாக்களான சப்பரம், தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்கள் வரும் நாட்களில் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து, உற்சவம் இனிதே நிறைவுபெறும்.
