Headlines

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உயரதிகாரி சமிந்த குலரத்ன இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை; முக்கிய முறைப்பாடு பதிவு

கொழும்பு: நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாகவும், பணிக்குழாம் பிரதானியாகவும் கடமையாற்றிய நிலையில், தற்போது பணியிடை நீக்கம் (Suspended) செய்யப்பட்டுள்ள திரு. சமிந்த குலரத்ன அவர்கள், இன்று (02) பிற்பகல் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

மிக முக்கியமான முறைப்பாடு ஒன்றை ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்வதற்காகவே அவர் அங்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் அளிக்கவுள்ள முறைப்பாட்டின் பின்னணி குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *