சென்னை: ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ‘கதிர்’ கதாபாத்திரம் மூலம் பிரபலமான குமரன் தங்கராஜன், நாயகனாக அறிமுகமாகியுள்ள ‘குமார சம்பவம்’ திரைப்படம் இன்று (12) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த டார்க் காமெடி த்ரில்லர் திரைப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
சீரியலில் அமைதியான கதாபாத்திரத்தில் தோன்றிய குமரன், இப்படத்தில் நகைச்சுவை, சண்டை, காதல் எனப் பன்முக நடிப்பை வெளிப்படுத்தி, ஒரு அறிமுக நாயகன் என்ற தடயமின்றி நடித்துள்ளதாக விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
ஒரு கொலை மர்மத்தை, நகைச்சுவை கலந்து கூறியுள்ளதே படத்தின் பெரிய பலம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், சில காட்சிகள் சீரியல் போன்று மெதுவாக நகர்வதும், திரைக்கதையில் உள்ள தொய்வும் படத்தின் பலவீனங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
மொத்தத்தில், ‘குமார சம்பவம்’ இந்த வார இறுதியில் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு படமாகவும், குமரனுக்கு ஒரு சிறப்பான தொடக்கமாகவும் அமைந்துள்ளது.
