புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு!
கொழும்பு: கொழும்பு, புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்புப் பணிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (15) காலை ஆரம்பமானது.
1964ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முதலாவது பாரிய புனரமைப்புத் திட்டம் இதுவாகும். இந்தத் திட்டத்தின் உத்தேச மொத்தச் செலவு 424 மில்லியன் ரூபாய் (42.4 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புனரமைப்பின் கீழ், நவீன ஓய்வறைகள், தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்த அபிவிருத்தித் திட்டம் பேருந்து நிலையத்தின் ஒட்டுமொத்த உட்கட்டமைப்பையும் தரம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
