கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று காலை CIDக்குச் சென்றிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு மேற்கொண்ட விஜயத்திற்கு, அரச நிதியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.