ரணில் கைது: நீதிமன்றம் முன் ஆதரவாளர்கள் குவிந்ததால் பதற்றம்

கொழும்பு: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) ஆதரவாளர்கள் பலர் நீதிமன்ற வளாகத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, ஆதரவாளர்கள் அங்கு குழுமியதால் சற்றே பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *