ஜா-எல, டிசம்பர் 03: கடுமையான வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டு, கடந்த ஐந்து நாட்களாக மின்சாரம் இன்றித் தவித்து வரும் ஜா-எல, இந்திவிட்டிய (Indivitiya) பகுதி மக்களுக்கு, இந்தியாவினால் உருவாக்கப்பட்ட ‘ஆரோக்கிய மைத்ரி பீஷ்ம் கியூப்’ (Aarogya Maitri BHISHM Cube) எனும் நடமாடும் வைத்தியசாலை ஒரு முக்கிய உயிர்நாடியாக மாறியுள்ளது.
இலங்கை மருத்துவ சேவைகள் பணிப்பாளர், கட்டுநாயக்க விமானப்படை வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி, இலங்கை மருத்துவக் குழுக்கள் மற்றும் வருகை தந்துள்ள இந்திய மருத்துவக் குழுவினரின் கூட்டு முயற்சியால் இந்த வசதி ஒரு திறந்த சமூக வெளியிலமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தற்காலிக மையம் பல வெளிநோயாளர் பிரிவு (OPD) சேவைகள், ஆய்வகப் பரிசோதனைகள், எக்ஸ்ரே வசதிகள் மற்றும் ஒரு சிறிய சத்திரசிகிச்சைக் கூடத்தையும் கொண்டுள்ளது.
சொந்த ஜெனரேட்டர் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களுக்கான சோலார் பேனல்களால் இயங்கும் இந்த ‘கியூப்’, அனர்த்த வலய நிலைமைகளுக்கு மத்தியிலும் தடையற்ற சுகாதார சேவையை உறுதி செய்தது.
கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவு (acute hypoglycaemia), மூல நோய், அதிர்ச்சி தொடர்பான காயங்கள், நீரிழப்பு மற்றும் பல்வேறு மருத்துவத் தேவைகளுக்காக 300 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
வழக்கமான சேவைகள் துண்டிக்கப்பட்ட நேரத்தில், இந்த நடமாடும் வைத்தியசாலையின் மூலம் சுகாதார சேவைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
