கொழும்பு, நவம்பர் 9 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சைகள் இன்று நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளன. மொத்தம் 340,525 பரீட்சார்த்திகள் இப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், அனைத்து பரீட்சார்த்திகளும் தமது அனுமதி அட்டை மற்றும் செல்லுபடியான அடையாள அட்டையுடன் குறித்த பரீட்சை நிலையங்களுக்கு முன்னதாகவே வருகை தருமாறு வலியுறுத்தியுள்ளார்.
