ரணிலின் பிணை மனு மீதான உத்தரவு சற்று நேரத்தில்: நீதிமன்றம் அரை மணி நேரம் ஒத்திவைப்பு!

கொழும்பு: கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு மீதான தனது உத்தரவை அறிவிப்பதற்காக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் விசாரணைகளை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

விசாரணைகளின்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சந்தேகநபர் மீது பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதாகவும், விசாரணைகள் பூர்த்தியடையாததால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் கோரினார்.

எனினும், பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, தனது கட்சிக்காரரைப் பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான், தனது உத்தரவை அறிவிப்பதற்காக விசாரணைகளை ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *