கொழும்பு: கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சாதாரண விடுதிக்கு (ward) மாற்றப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் சுகாதாரம் தொடர்பான அனைத்து முடிவுகளும் அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள குறிப்பிட்டார்.