Headlines

கம்பீர் வந்ததிலிருந்தே அர்ஷ்தீப் ஓரங்கட்டப்படுகிறார்”: அஸ்வின் நேரடிக் குற்றச்சாட்டு!

சென்னை: ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்ட நிலையில், “இந்திய அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றதிலிருந்தே, அர்ஷ்தீப் சிங் தொடர்ந்து ஓரங்கட்டப்படுகிறார்,” என ரவிச்சந்திரன் அஸ்வின் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். 100 T20 விக்கெட்டுகள் என்ற வரலாற்றுச் சாதனையை எட்டவிருந்த நிலையில், அர்ஷ்தீப் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது யூடியூப் பக்கத்தில் இது குறித்துப் பேசிய அஸ்வின், “சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அர்ஷ்தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகவே தெரிகிறது,” என்றார். துபாய் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானது என்பதால், கம்பீர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய போட்டியில், துடுப்பாட்டத்தை வலுப்படுத்த சிவம் துபே சேர்க்கப்பட்டதாலேயே, அர்ஷ்தீப் நீக்கப்பட்டார். துபே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், “இந்த பந்துவீச்சு கலவை ஒரு பலமான அணிக்கு எதிராக நிச்சயம் வேலை செய்யாது. இது மிகவும் ரிஸ்க்கானது,” என அஸ்வின் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *