கொழும்பு: 2025ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள், இன்று (03) இரவு வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி, நாடு முழுவதிலும் உள்ள 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இந்தப் பரீட்சையில், 307,951 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
அவர்களில், பிரெய்ல் முறையைப் பயன்படுத்திய 12 பரீட்சார்த்திகள் உட்பட, 901 விசேட தேவையுடைய மாணவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
One thought on “தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று இரவு வெளியீடு!”