செம்மணி வழக்கு: 500 இராணுவத்தினரை வெளியேற்றிய நீதிபதி இளஞ்செழியன்

செம்மணி மனித புதைகுழி வழக்கு தொடர்பாக பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கில் கிருசாந்தி கொலைக்கு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சோமரத்ன ராஜபக்சவின் மனைவியின் கடிதம் பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இதில் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், செம்மணி புதைகுழியை அடையாளம் காட்டுவதற்கு முன்பு, சோமரத்ன ராஜபக்ச ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதன்படி, செம்மணியில் அதிக எண்ணிக்கையில் இராணுவத்தினர் இருப்பதால், அவர்களுக்கு முன்னால் தான் அடையாளம் காட்ட முடியாது என்று கூறினார்.

இந்த நிலையில், நீதிபதி இளஞ்செழியன் அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். பின்னர், அதே எண்ணிக்கையில் போலீஸ் அதிகாரிகளை அந்த இடத்தில் நியமித்தார்.

மேலும், செம்மணி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சில முக்கியமான ஆதாரங்கள் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் சர்வதேச நிபுணர்களுக்கு மட்டுமே காட்டப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு தொடர்பான புதிய விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன.

One thought on “செம்மணி வழக்கு: 500 இராணுவத்தினரை வெளியேற்றிய நீதிபதி இளஞ்செழியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *