CIDயின் மெகா ஆப்பரேஷன் வெற்றி!

கொழும்பு: இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ‘கெஹெல்பத்தர பத்மே‘ உள்ளிட்ட ஐந்து முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களும், இன்று (30) மாலை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களை அழைத்து வருவதற்காக, இலங்கை விசேட பொலிஸ் குழுவொன்று இன்று காலை இந்தோனேசியா சென்றடைந்தது. அங்கு இந்தோனேசிய அதிகாரிகளிடமிருந்து சந்தேகநபர்களைப் பொறுப்பேற்றுக்கொண்ட அக்குழுவினர், தற்போது ஜகார்த்தாவிலிருந்து இலங்கையை நோக்கிப் பயணித்து வருகின்றனர்.

இவர்களுடன் கைது செய்யப்பட்டிருந்த பெண் மற்றும் குழந்தை, நேற்று (29) மாலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர். இலங்கை பொலிஸார், இந்தோனேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போல் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போதே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

One thought on “CIDயின் மெகா ஆப்பரேஷன் வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *