‘கூலி’ விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த லோகேஷ் கனகராஜ்: ரசிகர்களின் எதிர்பார்ப்பே காரணம்!

சென்னை: ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், சுமார் ஒரு மாதகால மௌனத்திற்குப் பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புகளே, சில ஏமாற்றங்களுக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை யாராலும் 100% பூர்த்தி செய்ய முடியாது. படம் LCU-வில் இருக்குமா, டைம் டிராவல் படமா என்றெல்லாம் நான் ஒருபோதும் சொல்லவில்லை,” என அவர் விளக்கமளித்தார். “ரசிகர்களின் எதிர்பார்ப்பை நான் குறை சொல்லவில்லை, அதுதான் எங்களை இந்த இடத்தில் வைத்துள்ளது. என் கதை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அடுத்த படத்தில் பூர்த்தி செய்ய முயற்சிப்பேன்,” என்றார்.

மேலும், “ஒரு இயக்குனருக்கு, படம் வெளியானாலே அது வெற்றிதான்; வசூல், லாப நஷ்டம் எல்லாம் தயாரிப்பாளரைப் பொறுத்தது,” என அவர் கூறிய கருத்து, திரையுலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘லியோ’, ‘கூலி’ படங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் ‘கைதி 2’ அல்லது ரஜினி-கமல் இணையும் படத்தை இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வலுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *