கொழும்பு – தீவின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை அல்லது மழையானது பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18) அறிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், மேற்கு மற்றும் தென் கடலோரப் பகுதிகளில் காலையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
