பிரசன்ன ரணதுங்க தனது மேன்முறையீட்டை வாபஸ் பெற்றார்: அபராதத்தைச் செலுத்த நீதிமன்றம் அனுமதி!
கொழும்பு: தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை, அவரது சட்டத்தரணிகள் இன்று (11) மீளப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
2.5 கோடி ரூபாய் அபராதத்தை தவணை முறையில் செலுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்தே, இந்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேல் மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், மீதொட்டமுல்லையில் காணி ஒன்றைச் சீரமைத்துக் கொடுப்பதற்காக, வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 6.4 கோடி ரூபாய் இலஞ்சம் கோரியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலேயே இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு: தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை, அவரது சட்டத்தரணிகள் இன்று (11) மீளப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
2.5 கோடி ரூபாய் அபராதத்தை தவணை முறையில் செலுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்தே, இந்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேல் மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், மீதொட்டமுல்லையில் காணி ஒன்றைச் சீரமைத்துக் கொடுப்பதற்காக, வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 6.4 கோடி ரூபாய் இலஞ்சம் கோரியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலேயே இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
