“நாட்டில் மீண்டும் யுத்தத்திற்கு இடமில்லை”: யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதி!

யாழ்ப்பாணம்: “நாட்டில் மீண்டும் எந்தவொரு யுத்தமும் ஏற்படுவதற்கு இடமளிக்காத வகையில் தனது அரசாங்கம் செயற்படும்,” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (01) யாழ்ப்பாணத்தில் உறுதியளித்தார். மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வடக்கில் யுத்தத்தின்போது பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்ட, விடுவிக்கப்படக்கூடிய காணிகள் அனைத்தும் மக்களுக்கு மீள வழங்கப்படும் என அவர் இதன்போது அறிவித்தார். வடக்கில் மக்கள் முகங்கொடுக்கும் பொருளாதாரச் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் தனது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்காக, இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 298 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாகாண மீனவர்கள் பயனடையும் வகையில், குளிரூட்டல் வசதிகள் மற்றும் ஏல மண்டபங்கள் உள்ளிட்ட பல உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன

2 thoughts on ““நாட்டில் மீண்டும் யுத்தத்திற்கு இடமில்லை”: யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *