கொழும்பு: சமீபத்தில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு ஆதரவளித்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து, இன்று (01) விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார்.
“நான் கைது செய்யப்பட்டதிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது வரை, குறிப்பாக சமூக ஊடகங்களில் எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் எனது நன்றிகள்,” என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அனைத்துத் தரப்பினரையும் தான் விரைவில் நேரில் சந்திக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் ஆற்றும் முதல் உரை இதுவாகும்.