நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பத் மான்பெரி 7 நாட்கள் தடுப்புக்காவலில்!
வலஸ்முல்ல: ‘ஐஸ்’ போதைப்பொருள் தயாரிப்புக்குரிய இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில், இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பத் மான்பெரியை, ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (PNB) நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கெஹெல்பத்தர பத்மே’க்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இந்தக் கொள்கலன்களில், ‘ஐஸ்’ போதைப்பொருள் தயாரிப்பதற்கான இரசாயனங்கள் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சரணடைந்த பின்னர் தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்த நிலையிலேயே, அவர் இன்று சரணடைந்தார். இந்த குற்றவியல் வழக்கு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
