Headlines

முகம் ஏன் கருப்பா இருக்கு?’ எனக் கேட்டேன்”: ரோபோ சங்கர் மறைவு குறித்து சிங்கம்புலி உருக்கம்!

சென்னை: நேற்று (18) இரவு காலமான தனது நண்பரும், சக நகைச்சுவை நடிகருமான ரோபோ சங்கர் குறித்து, நடிகர் சிங்கம்புலி உருக்கமாகப் பேசியுள்ளார். இந்தத் திடீர் மறைவு தனக்குப் பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும், இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, ரோபோ சங்கர் தொடர்ந்து மருந்துகள் உட்கொண்டதைக் கவனித்ததாக சிங்கம்புலி குறிப்பிட்டார். “சில நாட்கள் கழித்து, ‘உங்கள் முகம் முன்னை விடக் கருப்பாக இருக்கிறதே’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘அது ஒன்றுமில்லை அண்ணே, மருந்து சாப்பிடச் சாப்பிட சரியாகிவிடும்’ என்று சொன்னார். ஆனால், மரணம் அடையும் அளவிற்குப் போகும் என நான் நினைக்கவே இல்லை,” என சிங்கம்புலி வேதனையுடன் தெரிவித்தார். ‘புலி’, ‘தி லயன் கிங்’ போன்ற படங்களில் ரோபோ சங்கருடன் இணைந்து பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், “நல்ல தம்பி, நல்ல நண்பர்,” எனக் கூறி அஞ்சலி செலுத்தினார். திரையுலகில் ரோபோ சங்கரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *