கார்டிஃப்: இங்கிலாந்துக்கு எதிரான, மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது T20 போட்டியில், தென்னாபிரிக்க அணி டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டேர்ன் (DLS) முறைப்படி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என தென்னாபிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.
கார்டிஃபில் நேற்று (10) நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 7.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 97 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர், மழை காரணமாக இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 5 ஓவர்களில் 69 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்களை மாத்திரமே எடுத்துத் தோல்வியடைந்தது.
தென்னாபிரிக்கா சார்பில் மார்கோ ஜேன்சன் மற்றும் கோர்பின் போஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இங்கிலாந்து தரப்பில், ஜோஸ் பட்லர் மாத்திரம் 25 ஓட்டங்களைப் பெற்றார்.
