விரைவான பொருளாதார மீட்சி
2022ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி, இலங்கை உத்தியோகப்பூர்வமாக வங்குரோத்து நிலையை அறிவித்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, “அதன் பின்னர், நாடு நெருக்கடியிலிருந்து மீள்வதில் மிக விரைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது,” என்றார். “பொதுவாக, இத்தகைய வீழ்ச்சியைச் சந்திக்கும் நாடுகள் மீண்டுவர சுமார் ஒரு தசாப்த காலம் எடுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணிப்பார்கள். ஆனால், நாம் அடுத்த ஆண்டிற்குள்ளேயே 2019ஆம் ஆண்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை மீண்டும் அடைவோம் என நம்பிக்கையுடன் உள்ளோம்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
புலம்பெயர் சமூகத்திற்கு நன்றி
2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2025 பொதுத் தேர்தல்களின்போது, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அளித்த நிதி மற்றும் தார்மீக ஆதரவின் பங்களிப்பை ஜனாதிபதி இதன்போது விசேடமாக எடுத்துரைத்தார். “2019 தேர்தலில் எமது கட்சி சுமார் 3% வாக்குகளையே பெற்றது. ஆனால், உங்களின் பங்களிப்புடன், 2025 தேர்தலில் இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான பாராளுமன்ற ஆசனங்களுடன் நாங்கள் வெற்றி பெற்றோம்,” என அவர் நன்றி தெரிவித்தார்.
மீண்டும் ஒரு நெருக்கடிக்கு இடமில்லை
“எங்கள் முன் இரண்டு முக்கிய சவால்கள் இருந்தன: உடனடி <a href=”https://tamilmurasu.lk/category/economy/“>பொருளாதார நெருக்கடியிலிருந்து</a> மீள்வது, மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய வீழ்ச்சி மீண்டும் ஏற்படாதவாறு அடித்தளத்தை அமைப்பது. அந்த இலக்கை நோக்கியே நாங்கள் பயணித்து வருகிறோம்,” எனவும் ஜனாதிபதி விளக்கினார்.
