ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.4% வளர்ச்சி!

கொழும்பு: 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம், 198,235 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது. இது, கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், 20.4% அதிகரிப்பாகும்.

ஆகஸ்ட் மாதத்தில், வழமைபோல இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் (46,473 பேர்) வருகை தந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, சீனா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

இதன்மூலம், 2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,566,523 ஆக உயர்ந்துள்ளது. இவ்வருடத்தில், இந்தியாவே (325,595) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *