Headlines

பல மாகாணங்களுக்குக் கனமழை எச்சரிக்கை: 75 மி.மீ.க்கும் அதிக மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

கொழும்பு: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இன்று (05) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற்பகல் 1.00 மணிக்கு பின்னரே, பெரும்பாலான மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் சில மாவட்டங்களில் காலையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். கனமழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலதிக காலநிலைத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *