கொழும்பு, நவம்பர் 12: வட மாகாணத்தில் செயற்பட்டு வரும் பிரபல குற்றக் குழுவான ‘ஆவா குழுவின்’ தலைவன் என நம்பப்படும் ‘வினோத்’ உட்பட இருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது ‘வினோத்’ வசம் 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது கூட்டாளி ஒரு கைக்குண்டு மற்றும் ஒரு வாளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த கைதுகள் இடம்பெற்றன.
