கொழும்பு – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (நவம்பர் 08) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான, ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அத்துடன் அம்பாறை மாவட்டத்திலும் இன்று காலையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பதிவாகக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள, பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கனிவுடன் கேட்டுக் கொண்டுள்ளது.
