இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையிலான குறுகிய காலப்பகுதியில் 1,375 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர இது தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உயிரிழப்புகள் மற்றும் பாரதூரமான விபத்துக்கள்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பதிவான மொத்த விபத்துக்களில் 147 விபத்துக்கள் மிகவும் பாரதூரமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்துக்களின் காரணமாக இதுவரையில் 155 பேர் உயிரிழந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த சாரதிகள் மற்றும் பாதசாரிகள் போக்குவரத்து விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுமாறு பொலிஸார் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
