சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தின் மீது ஈரான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரானுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 300-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த புதிய தாக்குதல் அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக வெள்ளிக்கிழமையன்று, காயமடைந்தவர்களில் 273 பேர் ஏற்கனவே தங்கள் கடமைகளுக்குத் திரும்பியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது. இந்த மோதலில் இதுவரை 13 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
