Headlines

பிக் பாஸ் சீசன் 9: சரித்திரத்தை மாற்றிய திவ்யா கணேஷ்! வைல்ட் கார்ட் என்ட்ரி டூ வின்னர் – குவிந்த பரிசு மழை!

சென்னை, ஜனவரி 19: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிப் போட்டியில், வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே நுழைந்த திவ்யா கணேஷ், டைட்டிலை வென்று புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.

பரிசு விபரம்: கடும் போட்டிக்கு மத்தியில் முதல் இடத்தைப் பிடித்த திவ்யாவிற்கு ரூ. 50 லட்சம் ரொக்கப் பரிசும், சுமார் ரூ. 19 லட்சம் மதிப்புள்ள ‘Maruti Suzuki Victoris’ சொகுசு காரும் பரிசாக வழங்கப்பட்டது. இதுதவிர, பிக் பாஸ் வீட்டில் அவர் இருந்த 77 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு ரூ. 30,000 வீதம் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆக மொத்தம், இந்த வெற்றியின் மூலம் அவர் ரூ. 70 லட்சத்திற்கும் மேல் அள்ளியுள்ளார்.

போட்டியின் போக்கு: இரண்டாவது இடத்தை சபரி பிடித்தார். கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு முன்னரே வெளியேறினார். வைல்ட் கார்டாக உள்ளே வந்த திவ்யா, தொடக்கத்தில் பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோருடன் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் சாண்ட்ராவுக்காகக் குரல் கொடுத்த விதம் ஆகியவை அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுத் தந்தது.

உருக்கமான பேச்சு: வெற்றிக்குப் பின் பேசிய திவ்யா, “பல வேடங்களில் நடித்திருந்தாலும், இதுவரை ஒரு விருது கூட வாங்கியதில்லை. இந்த வீட்டில் நான் நானாக இருந்ததற்காகக் கிடைத்த முதல் விருது இது,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *