கொழும்பு: மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இத்துடன், மத்திய மலைகளின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.