உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சதித்திட்டம் உட்பட 23,000 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய வழக்கின் பிரதிவாதிகள், இன்று (17) மூன்று நீதிபதிகள் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற அமர்வு முன் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கத் தொடங்கினர்.
இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவா நிஸங்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகளான ஜைனுல் ஆப்தீன் முஹம்மது ஜசீம், முஹம்மது முஸ்தபா முஹம்மது ரிஸ்வான் மற்றும் மீரா ஜாஹிர் முஹம்மது நாப்லி ஆகியோர் கூண்டில் இருந்து வாக்குமூலம் அளித்தனர்.
இந்த வழக்கில் மொத்தம் 24 பிரதிவாதிகள் பெயரிடப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதிவாதிகள் தங்கள் தரப்பு சாட்சியங்களைத் தொடர்ந்து முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
