Headlines

விசாரணைக்கு பின்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார் நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்றுவரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய சம்மனுக்கு இணங்க, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (21) காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜரானார்.

குறித்த பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாகவே அவர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அங்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *