இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். இந்திய ஊடக அறிக்கைகளின்படி, இந்த விஜயம் செப்டம்பர் முதல் வாரத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கும் இடையே அண்மையில் இடம்பெற்றது.
இந்த விஜயத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமர திசாநாயக்க மற்றும் ஏனைய சிரேஷ்ட அரச அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுச் செயற்பாடுகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்நாத் சிங் செப்டம்பர் 2023 இல் இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் பின்னர் அந்த விஜயம் ரத்து செய்யப்பட்டது.
(மேலே உள்ள செய்தித் தொகுப்பு, இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகையை படத்துடன் விளக்கிக் காட்டுகிறது.)
