அபார ஆரம்பம் வீண்: அவுஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா
கொழும்பு: மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கௌர், தமது கீழ் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் வலுவான ஆரம்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தப் போட்டியில், இந்திய அணி 330 ஓட்டங்களைக் குவித்தது. இது, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு அணி எடுக்கும் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா (80) மற்றும் பிரதிகா ராவல் (75) ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 155 ஓட்டங்களைக் குவித்தனர்.
இருப்பினும், 42.5 ஓவர்களில் 294/4 என்ற வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 36 ஓட்டங்களுக்குள் இழந்தது. இது குறித்துப் பேசிய ஹர்மன்பிரீத், “நாங்கள் ஆரம்பித்த விதத்திற்கு, இன்னும் 30-40 ஓட்டங்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். கடைசி ஆறு ஓவர்களில் நாங்கள் ஓட்டங்களை இழந்ததே தோல்விக்குக் காரணம்,” என்றார். இந்த சர்வதேச கிரிக்கெட் தொடரில் இது இந்தியாவின் முதல் தோல்வியாகும்.
