Headlines

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

கொழும்பு, நவம்பர் 19: வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (நவம்பர் 19) பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் கூறியுள்ளது.

அதிகாலை வேளையில் சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் பனி மூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அன்புடன் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *