Headlines

இலங்கையை அண்மித்த வளிமண்டலக் குழப்பம்: நாளை காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறும்! – 100 மி.மீ. வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

கொழும்பு, நவம்பர் 24: இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தின் கீழ் மட்டத் தளம்பல் நிலை நாளை (நவம்பர் 25) காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறக்கூடும். எனவே, அடுத்த சில நாட்களில் தீவு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் காணப்படும்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தீவின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தீவின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அன்புடன் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *