கொழும்பு, நவம்பர் 25: இந்த வருடத்தில் இதுவரையில் மொத்தம் 200,000 புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.
இதே காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், கடந்த வருடத்தை விட 18% அதிகமான வருமான இலக்கு திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்: “கடந்த வாரம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதன் வரலாற்றில் அதிகபட்ச வருமான வசூலை எட்டியது, 2 ட்ரில்லியன் ரூபா இலக்கைத் தாண்டியது. இன்றுவரை, திணைக்களம் 2,080 பில்லியன் ரூபா வருமானத்தை வசூலித்துள்ளது.”
