Headlines

எதிர்க்கட்சியினரின் தேவையற்ற அச்சறுத்தலால் கல்விச் சீர்திருத்தங்கள் பாதிப்பு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாட்டில் தேவையற்ற அமைதியின்மையை உருவாக்கி, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் சில பகுதிகளைத் தள்ளிப்போடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் எதிர்க்கட்சியினரும் திட்டமிட்டுச் செயல்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பெற்றோர் மத்தியில் தேவையற்ற அச்சம்

எதிர்க்கட்சியினர் பரப்பும் பொய்ப் பிரசாரங்கள் காரணமாகப் பெற்றோர்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இது சீர்திருத்தச் செயல்பாட்டின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

“பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய பின்னர், கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது கடினமாகியுள்ளது. எந்தவொரு சீர்திருத்தத்தின் போதும் சில குறைபாடுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் எதிர்க்கட்சியினர் ஒவ்வொரு சிறிய சிக்கலையும் சீர்திருத்தங்களின் தோல்வியாகச் சித்திரிக்கின்றனர்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

கல்விச் சீர்திருத்தங்கள் தள்ளிப்போடப்படாது

அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய அமைச்சர், கல்விச் சீர்திருத்தங்கள் முழுமையாகத் தள்ளிப்போடப்படாது என்றும், முன்மொழியப்பட்ட ஐந்து நிபந்தனைகளில் நான்கு அரைவாசி (4.5) திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். ஆறாம் தரத்திற்கான ஆங்கிலப் பாடத்திட்டத் தொகுதியில் (English module) ஏற்பட்டுள்ள ஒரு சிறிய சிக்கல் காரணமாகவே ஒரு சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *